Saturday 7 January 2017

கல்கண்டு பொங்கல்

கல்கண்டு பொங்கல்
தேவையானவை:
 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை + கல்கண்டு - முக்கால் கப்
 நெய்/வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 காய்ச்சிய பால் - கால் கப்
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 உலர்திராட்சை (கிஸ்மிஸ்) - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
 முந்திரி - 5
 பச்சைக் கற்பூரம் - கடுகளவு
 குங்குமப்பூ - 5 நரம்பு
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
சர்க்கரை மற்றும் கல்கண்டைப் பொடித்து தனியாக வைக்கவும். பொங்கலைச் சுவைக்கும்போது கல்கண்டை சுவைப்பது சிலருக்குப் பிடிக்காது. பிடிப்பவர்கள் முழுதாகவே கல்கண்டை சேர்க்கலாம். குங்குமப்பூவை சிறிது பாலில் ஊற விடவும்.குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்/வெண்ணெய் விட்டு பாசிப்பருப்பைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு, குக்கரில் அரிசியோடு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடிப்போட்டு 4 விசில் வரை வேகவிட்டு, நன்கு மசித்து வைக்கவும்இத்துடன் பால் சேர்த்து வேகவிட்டுப் பொடித்த சர்க்கரை-கல்கண்டு கலவை, பச்சைக் கற்பூரம், உப்பு, பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து கிளறவும். தேவையான அளவு நெய்விட்டு மிதமான தீயில் 8 நிமிடம் கிளறவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை (கிஸ்மிஸ்), ஏலக்காய் சேர்த்து கிளறி, இறக்கி பரிமாறவும்.



No comments:

Post a Comment